search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்விழா"

    • முகமது சதக் அறக்கட்டளை பொன்விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை அறக்கட்டளை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் அறக்கட்டளை 1973-ம் ஆண்டு மாவட்டத் தில் கல்வி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்களை தொடங்கியது. இந்த நிறுவனம் தற்போது கீழக் கரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்க ளில் 17 கல்வி நிறுவனங் களை நடத்தி வருகிறது.

    இதன் பொன் விழா நிகழ்ச்சி கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அல் ஹாஜ் டாக்டர் எஸ்.எம்.தஸ்தகீர் அரங்கில் நடந்தது.

    இதில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் வரவேற்றார்.அறக்கட்டளையின் வளர்ச்சி குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டு பொன்விழா மலர் வெளி யிடப்பட்டது. முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் முதல்வர் அலா வுதீன் வெள்ளி செங்கோல் வழங்கினார்.

    அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகீம், பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது ஆகியோர் வெள்ளி வாள் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    தொடர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலிய மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில் சாமி அண்ணாதுரைக்கு தேசத்தின் பெருமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மயில்சாமி அண்ணா துரை பேசுகை யில், நாட்டில் ஆண்-பெண் இரு பால் மாணவர்களும் இந்தி யாவை அறிவியலின் உச் சிக்கு எடுத்துக் சென்று பெருமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    ராமநாதபுரம் உதவி கலெக்டர் சிவானந்தம், முன்னாள் மாணவர்கள் ராஜ்சுப்ரமணியம், லோக சண்முகம், பரமேஸ்வரன், அருள்ராஜ் குமார், புரு ஷோத்தமன், மோகன், ரிஸ்வான் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறந்த தொழிலதிபர் விருது சீனிவாசராஜாவுக்கும், சிறந்த பெண் தொழிலதிபர் விருது ரவூபா, பிரதிமா குப்பாலா ஆகியோருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது ஓடந்துறை சண்மு கம், சிறந்த பரோபகாரர் விருது பாத்திமா ரபீக், கதீஜா ரகுமான் ஆகியோ ருக்கும், அறிவியல் வித்தகர் விருது ரைஹானா பேகம், பெண்களின் பெருமை விருது ஷகிலா பாரூக் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.

    மேலும் மாணவர் சேவை, தொழில் சாதனை விருதுகளும் வழங்கப் பட்டது. முகமது சதக் அறக்கட்ட ளையின் இயக்குனர் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முகமது, செயலாளர் ஹாஜியானி எஸ்.எம்.எச்.சர்மிளா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அறக்கட்ட ளை கல்வி நிறுவ னங்களில் 25 வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றி யவர்களுக்கு பணியாளர் சேவை விருது வழங்கப் பட்டது.

    முடிவில் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் எஸ்.எம்.ஏ.ஜெ.அப்துல் ஹலீம் நன்றி கூறினார். இதில், மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் பணியா ளர்கள் என 2 ஆயிரத்திற்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

    • திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.
    • வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.

    கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் உள்ள கோஹஜ் மருத்துவமனையில் சபைத் தலைவர் ரெஜினாள் தொடங்கி வைத்தார்‌. வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், மருத்துவர் சங்கீதா, மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, ஒன்றிய துணை பெருந்தலைவர் சவுரிராஜ், காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 60 பயணாளிகள் பயனடைந்தனர்.

    ×