search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்
    X

    காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

    காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

    • திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.
    • வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.

    கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் உள்ள கோஹஜ் மருத்துவமனையில் சபைத் தலைவர் ரெஜினாள் தொடங்கி வைத்தார்‌. வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், மருத்துவர் சங்கீதா, மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, ஒன்றிய துணை பெருந்தலைவர் சவுரிராஜ், காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 60 பயணாளிகள் பயனடைந்தனர்.

    Next Story
    ×