search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருங்குளம்"

    • கொல்லங்கோடு நகராட்சி 2 வது வார்டுக்குட்பட்ட இடம்
    • பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோடு நக ராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெட்டுவிளை முதல் பெருங்குளம் வரையி லான 235 மீட்டர் சாலை, 25 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டது.

    இந்த சாலையில் தற்போது வரை எந்த பணியும் செய்யப்படாமல் இருப்பதால் சாலையின் கீழ் பகுதியில் ஒரு பெருங்குளம் ஒன்று உள்ளது. அந்த பெருங்குளத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட இடத்தில் பக்கச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது.

    இந்த சாலையை நம்பி தான் தற்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தபால் நிலையத்துக்கு செல்பவர்கள், மின்வாரிய அலுவலகத்தில் செல்ப வர்கள், நகராட்சி அலுவல கத்திற்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த சாலை வழியாகத்தான் கடந்த செல்கின்றனர்.

    இந்த சாலைக்கும் பெருங்குளத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் பக்கத்துவர் இல்லாமல் இருப்பதால் இங்கு விபத்துகள் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பெருங்குளத்துக்கு பக்கச்சுவர் அமைத்து இந்த சாலையை கான்க்ரீட்டால் சீரமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடைக்காகுழி ஊராட்சியில் உள்ள பெருங்குளம் - தச்சக்காணி செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெருங்குளம் - தச்சக்காணி செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பெருங்குளம்-தச்சக்காணி சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், அடைக்காகுழி ஊராட்சி தலைவர் ஜெயராணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், அடைக்காகுழி ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜினோ, சுனில் குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்

    ×