search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பள்ளி"

    • அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம் செய்தனர்.
    • மாணவிகள் கல்வி பாதிப்பதாக புகார் எழுந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி யும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.

    இங்கு சாலையின் இரு புறமும் காய் மற்றும் பழ வியாபாரங்கள் தள்ளு வண்டி, வேன்களில் வைத்து ஏராளமான வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையோரம் வைத்து வியாபாரம் செய்ப வர்கள் ஒலி பெருக்கி மூலம் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கூவி கூவி அதிக சத்தத்துடன் பொருட்களை விற்பதால் அருகில் உள்ள பள்ளியில் பாடம் நடத்த முடியவில்லை.

    மேலும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவிகளால் கவனிக்க முடியாத ஒரு அவல நிலை யும் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதாகவும் உள்ளது.

    இதுகுறித்து மேலூர் புது பர்மா காலனி சேர்ந்த சமூக ஆர்வலர் துரைசிங்கம் கூறுகையில், பள்ளி மாண விகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் சாலையோரம் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேலூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளேன். எனவே போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி மாணவி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

    • திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1800 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விளங்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி பாதாள சாக்கடை வழியாக பள்ளி வளாகத்திற்குள் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர், நகராட்சி ஆணையாளருக்கு புகார் தெரிவித்தார். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து மாணவிகள் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் செல்லக்கூடிய பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவறையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் வெளியேறி பள்ளி வளாகத்தில் தேங்கி உள்ளது. அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதால் மதிய வேளையில் உணவு உண்ண கூட முடியாத சூழ்நிலை உள்ளது.

    மைதான பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்டநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×