search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கொள்ளையர்"

    • தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் கடை வீதிகளில் கண்காணிப்பு

    நாகர்கோவில், நவ.2-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிக ரித்து வருகிறது. டிப்டாப் உடையில் கை குழந்தை களுடன் வரும் பெண்கள் கூட்ட நெரிசலை பயன் படுத்தி நகைகளை பறித்து விட்டு தப்பி சென்று விடு கிறார்கள்.

    இந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் உத்தர வின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்ப டும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது பஸ்சில் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

    மேலும் திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் மப்டி உடையில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பெண் கொள்ளையர்களின் புகைப்படங்களை பஸ் நிலையங்களில் ஒட்டி வைத்துள்ளனர். அந்த கொள்ளையர்களை பார்த்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறப்பட் டுள்ளது.

    அந்த அறிவிப்பில் போலீ சாரின் செல்போன் எண்க ளையும் குறிப்பிட் டுள்ளனர். அந்த செல்போ னில் தொடர்பு கொண்டு பெண் கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளிலும் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது. மீனாட்சிபுரம், செம்மாங்குடி ரோடு, வடசேரி, கோட்டார் பகுதிகளில் கூட்டம் அதிக மாக உள்ளது.

    எனவே கடை வீதிகளி லும் போலீசார் கண் காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை, குளச்சல், குலசேகரம், கன்னியாகுமரி போன்ற பெரு நகரங்களில் உள்ள கடைவீதிகளிலும் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகை யில், தீபாவளி பண்டிகையை யொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே கடைக்கா ரர்கள் சி.சி.டி.வி. காமி ராவை முழுமையாக செயல் பட வைக்க வேண்டும். பொதுமக்களும் கடை வீதிகளுக்கு வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தங்களது உடைமை களையும், பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப் பாக பஸ்களில் பயணம் செய்யும்போது கூட்டத்தில் பயன்படுத்தி பெண் கொள் ளையர்கள் கைவரிசை காட்டி வருவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது
    • நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த திருட்டு சம்பவங்களில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் டிப்-டாப் உடை அணிந்து வரும் பெண்கள் கல்லூரி மாணவிகள் போல பயணி யோடு பயணியாக சேர்ந்து நகை திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.

    இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது. இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    மேலும் புகைப்படங் களை பஸ் நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்று துண்டு பிரசுரங்கள் ஒட்டி உள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் புது நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பெண் போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×