என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகரில் ஓடும் பஸ்சில் திருட்டு - பெண் கொள்ளையர்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸ் தேடுதல் வேட்டை
- 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது
- நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த திருட்டு சம்பவங்களில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் டிப்-டாப் உடை அணிந்து வரும் பெண்கள் கல்லூரி மாணவிகள் போல பயணி யோடு பயணியாக சேர்ந்து நகை திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது. இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மேலும் புகைப்படங் களை பஸ் நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்று துண்டு பிரசுரங்கள் ஒட்டி உள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் புது நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பெண் போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்