search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் ஓடும் பஸ்சில் திருட்டு - பெண் கொள்ளையர்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸ் தேடுதல் வேட்டை
    X

    நாகரில் ஓடும் பஸ்சில் திருட்டு - பெண் கொள்ளையர்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸ் தேடுதல் வேட்டை

    • 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது
    • நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த திருட்டு சம்பவங்களில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் டிப்-டாப் உடை அணிந்து வரும் பெண்கள் கல்லூரி மாணவிகள் போல பயணி யோடு பயணியாக சேர்ந்து நகை திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.

    இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது. இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    மேலும் புகைப்படங் களை பஸ் நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்று துண்டு பிரசுரங்கள் ஒட்டி உள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் புது நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பெண் போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×