search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் ஊழியர் மாயம்"

    • குளச்சலில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய ரெக்சின் ஜீவாவை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சைமன் காலனியை சேர்ந்தவர் ரிச்சர்டு, கடல் தொழிலாளி. இவரது மகள் சகாய ரெக்சின் ஜீவா (வயது 19), பி.காம். 2-ம் ஆண்டு படித்து விட்டு குளச்சலில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 25-ந் தேதி காலை சகாய ரெக்சின் ஜீவாவை, அவரது சகோதரர், மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கடையில் விட்டுச் சென்றார். இரவில் அவரை அழைத்து வர சகோதரர் கடைக்கு சென்றார். அப்போது சகாய ரெக்சின் ஜீவா, கடையில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு போன் செய்துள்ளார். அங்கும் வரவில்லை. இதனை தொடர்ந்து சகாய ரெக்சின் ஜீவாவை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் சகாய பிரபா, குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய ரெக்சின் ஜீவாவை தேடி வருகின்றனர்.

    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
    • ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள கூத்தாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சினேகா. இவர் ராயக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திருப்பிய அவர் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் பெற்றோர் எழுந்து பார்த்த போது மகள் சினேகா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • வீட்டை விட்டு சென்ற திவ்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி திவ்யா (வயது 24).இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற திவ்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் போகவில்லை.

    இதையடுத்து பல்வேறு இடங்களில் விசாரித்தும் திவ்யா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    எனவே காணாமல் போன திவ்யாவை கண்டுபிடித்து தருமாறு பேரிகை போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார் .

    அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.

    ×