search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் மாயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் மாயம்

    • வீட்டை விட்டு சென்ற திவ்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி திவ்யா (வயது 24).இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற திவ்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் போகவில்லை.

    இதையடுத்து பல்வேறு இடங்களில் விசாரித்தும் திவ்யா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    எனவே காணாமல் போன திவ்யாவை கண்டுபிடித்து தருமாறு பேரிகை போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார் .

    அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×