என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சலில் நகைக்கடை பெண் ஊழியர் மாயம்
- குளச்சலில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய ரெக்சின் ஜீவாவை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குளச்சல் சைமன் காலனியை சேர்ந்தவர் ரிச்சர்டு, கடல் தொழிலாளி. இவரது மகள் சகாய ரெக்சின் ஜீவா (வயது 19), பி.காம். 2-ம் ஆண்டு படித்து விட்டு குளச்சலில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 25-ந் தேதி காலை சகாய ரெக்சின் ஜீவாவை, அவரது சகோதரர், மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கடையில் விட்டுச் சென்றார். இரவில் அவரை அழைத்து வர சகோதரர் கடைக்கு சென்றார். அப்போது சகாய ரெக்சின் ஜீவா, கடையில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு போன் செய்துள்ளார். அங்கும் வரவில்லை. இதனை தொடர்ந்து சகாய ரெக்சின் ஜீவாவை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் சகாய பிரபா, குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய ரெக்சின் ஜீவாவை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்