search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு குண்டு வெடிப்பு"

    • முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது.
    • ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள குந்தலஹள்ளியில் இயங்கிவரும் பிரபல ஓட்டல் ராமேஸ்வரம் கபேவில் நேற்று மதியம் 1 மணி அளவில் 250-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குண்டுவெடிப்பில் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் வேறு குண்டுகள் ஏதாவது இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தினர். ஓட்டலில் வெடித்த குண்டு ஐ.இ.டி வகை வெடிகுண்டு என்றும் வீரியம் குறைவான வெடிகுண்டு என்றும் தெரியவந்தது.

    குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு டைமர் கருவி, நட்டுகள், போல்டுகள், டிபன் பாக்ஸின் உடைந்த துண்டுகள் மற்றும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தொழில் போட்டி காரணமாக யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த ஓட்டலின் நிர்வாக இயக்குனர் திவ்யா கூறும்போது:-

    தொழில்போட்டியில் வாடிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தீவிரவாத அமைப்புகள் யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை.

    எனவே ஓட்டலில் குண்டு வைத்தது யார் என்று போலீசார் துப்பு துலக்கினர். அப்போது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்துகொண்டு முககவசம் அணிந்தபடி குண்டுவெடிப்பு நடந்த ஓட்டல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி காலை 11.30 மணியளவில் ஓட்டலுக்கு நடந்து வரும் காட்சிகளும், பின்னர் அந்த நபர் கேஷ் கவுண்டரில் பணம் செலுத்தி ஒரு தட்டில் ரவா இட்லியை வாங்கி கொண்டு காலை 11.45 மணியளவில் அவர் குப்பை தொட்டி அருகே ஒரு பையை வைத்துவிட்டு மீண்டும் பஸ்சில் புறப்பட்ட காட்சிகளும் பதிவாகி இருந்தது. அவர் சென்ற பின்புதான் அந்த பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்தது இந்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் என்பது உறுதியானது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் எப்படியும் கேமரா மூலம் சிக்கிவிடுவோம் என்று தெரிந்தும் அந்த நபர் மிகவும் தைரியமாக வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்துள்ளார்.

    இதற்கிடையே சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வாலிபரை ஏ.ஐ. தொழில் நுட்பம் (ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட்) மூலம் கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது முக அம்சங்கள் சிசிடிவி மூலம் கைப்பற்றப்பட்டு அவரது முகத்தை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். மேலும் ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஓரிரு நாட்களில் அவரை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்தார்.

    குண்டு வெடிப்பில் காயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த கெலாட் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் குண்டு வெடித்த இடத்தையும் பார்வையிட்டனர். மேலும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட சம்பவத்தை மாநில அரசு முன்னரே தீவிரமாக எடுத்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.      

    • குண்டு வைத்த நபர் பேருந்தில் வந்துள்ளார்.
    • டைமர் செட் செய்து வெடிகுண்டடை வெடிக்கச் செய்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா போலீசார் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தடவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

    பா.ஜனதா தலைவர்கள் சித்தராமையான தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர், சித்தராமையாக இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சம்பவத்தை கர்நாடாக அரசு நடத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்த நியைியில் சித்தராமையாக இது தொடர்பாக தெரிவிக்கும்போது "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்து வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை மந்திரி சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். நான் மருத்துவமனைக்கும், சம்பவ நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறேன்.

    மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜனதா இதை அரசியலாக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே குண்டு வைத்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவரின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒரு பையுடன் 30 முதல் 39 வயதிற்கு உட்பட்ட ஒருவர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

    • லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    • தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    பெங்களூருவில் ராமேசுவரம் கபே ஓட்டலில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து தென் மாநிலங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை மாநகரில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

    லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெங்களூருவில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை போன்று தென் மாநிலங்களில் வேறு எங்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் மாநில போலீசார் முழுமையான கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்து 9 பேர் காயம்.
    • உபா மற்றும் குண்டு வெடிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை.

    பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. முதலில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது உறுதி செய்யப்பட்டது.

    குண்டு வெடிப்பு தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் பா.ஜனதாவினர் கர்நாடகா அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், இந்த சம்பவத்தை தடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கார்நாடகா மாநில பாரதிய ஜனதா தலைவர் வி.ஓய. விஜேந்த்ரா கூறுகையில் "இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்க வேண்டம். முதலமைச்சர் சித்தராமையா இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றார்.

    ×