search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரில் மழை"

    • மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஒயிட்பீல்டு, பெல்லந்தூர், இந்திராநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்புகள் நீரில் மூழ்கின.
    • சன்னி புரூக்ஸ் லே-அவுட், ரெயின்போ லே-அவுட், எமலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நகரமாக கருதப்படும் பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

    இங்கு கடந்த 4-ந்தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதாவது மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஒயிட்பீல்டு, பெல்லந்தூர், இந்திராநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்புகள் நீரில் மூழ்கின. சன்னி புரூக்ஸ் லே-அவுட், ரெயின்போ லே-அவுட், எமலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    ரூ.5 கோடி முதல் ரூ.30 கோடி வரை மதிப்புடைய சொகுசு பங்களாக்களில் வசித்த பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஓட்டல்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகள் இருந்தும் அவர்கள் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது. பெங்களூரு வெள்ளம் அவர்களை நிர்கதி நிலைக்கு தள்ளியுள்ளது.

    அந்த பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. அதனால் அங்கு இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பியுள்ளனர். வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

    தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் இருந்து பிரிட்ஜ், சமையலறையில் இருந்து பொருட்கள், மரச்சாமான்கள், விலை உயர்ந்த வீட்டு அலங்கார பொருட்கள் அனைத்தும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த குடியிருப்புகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வீடுகளை சுத்தப்படுத்தும் பணியில் வீட்டின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    வரலாறு காணாத மழையால் எச்.ஏ.எல். அலுவலகம், விப்ரோ மற்றும் 500-க்கும் மேற்பட்ட தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் புகுந்ததால் பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை விட்டு இருந்தது. மேலும் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தி இருந்தது. வரலாறு காணாத மழைக்கு 500-க்கும் மேற்பட்ட தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப (ஐ.டி.-பி.டி.) நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 30-ந்தேதி பெய்த மழைக்கே ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மொத்தத்தில் இந்த வெள்ளத்தால் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசு முறைப்படி ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிட்டால் மட்டுமே உண்மையான சேதம் எவ்வளவு என்பது தெரியவரும்.

    • பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • மாரத்தஹள்ளி-சர்ஜா புரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. நகரின் பல இடங்களில் சுமார் 5 மணி நேரம் கனமழை கொட்டியது.

    இரவு முழுவதும் பெய்த மழையால் பெங்களூரின் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மாரத்தஹள்ளி-சர்ஜா புரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. ஈகோஸ்பேஸ் அருகே வெளிவட்ட சாலை, பெல்லந்தூர், கே.ஆர்.மார்க்கெட், சில்க் போர்ட் சந்திப்பு, வர்தூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது.

    பழைய விமான நிலைய சாலையில் வெள்ளத்தில் பஸ்கள் சிக்கி கொண்டன. சாலை வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மிதந்தன. பாலகெரே பானத்தூர் சாலை ஆறு போல் காட்சி அளிக்கிறது.

    கனமழை-வெள்ளம் காரணமாக பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர தேவைகள் தவிர, வீடுகளை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    பெங்களூரு புறநகரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பல பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.

    பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கடந்த 30-ந்தேதி பெய்த பலத்த மழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பலத்த மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வருகிற 7-ந்தேதி வரை பெங்களூரு, பெங்களூரு ரூரல், சிக்கபள்ளாப்பூர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவங்கேரே, ஹாசன், கோலார், ராமநகரா, குடகு, சாமராஜா நகர், மாண்டியா, மைசூர், ஷிமோகா மற்றும் தும்கூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ள சேதத்தை கணக்கிடும்படி வருவாய்த்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ×