search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூனைகள்"

    • வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.
    • வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய் பரவி வருகிறது. பெலைன் பார்வோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் பூனைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. சென்னையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பூனைகள் அதிகரித்து வருகின்றன.

    சிறிய பூனைகள் மட்டுமின்றி அனைத்து வயது கொண்ட பூனைகளும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த வைரஸ் தாக்கிய பூனைகளுக்கு காய்ச்சல், ஆழ்ந்த மனச்சோர்வு மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் ஏற்படுகிறது. பல பூனைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சில பூனைகளுக்கு ரத்தக்கசிவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-

    பூனைகளை தாக்கும் பெலைன் பான்லூகோபீனியா அல்லது பெலைன் பார்வோ வைரஸ், தொற்றக்கூடிய வைரஸ் நோயாகும். இது பூனைகளை, குறிப்பாக பூனைக்குட்டிகளை பாதிக்கிறது. இந்த வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருகிறது. வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.

    இந்த வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் சிகிச்சை அளித்தாலும் 60 சதவீத பூனைகள் மட்டுமே சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக்கின்றன. தடுப்பூசி போட்டால் தான் பூனைக்குட்டிகளை காப்பாற்ற முடியும்.

    இந்த வைரஸ் எப்போதும் இருக்கும். ஆனால் குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு முன்பும், பின்பும் அதிகமாக பரவும். கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நோய்த்தொற்று விகிதம் குறைவாக உள்ளது. அதிக அளவில் பூனைகள் இனப்பெருக்கம் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போடாதது ஆகியவையே இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.

    இந்த வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு கால்நடை கிளீனிக்குகளுக்கும் தினமும் 5 முதல் 6 பூனைகள் கொண்டு வரப்படுகின்றன.

    பூனைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றால் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகமாக இருக்கும். தாமதமாக கொண்டு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு 3 முதல் 5 மாதம் வயது கொண்ட பூனைகளில் அதிகம் காணப்படுகிறது. இது தொற்றுநோயாக இருப்பதால், ஆரோக்கியமான பூனைகளை, வைரஸ் தாக்கிய பூனைகளிடம் இருந்து தனியாக வைக்க வேண்டும். இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது.

    பி.சி.ஆர். ஸ்னாப் பரிசோதனை மூலம் ஒன்றிரண்டு நிமிடங்களில் இந்த நோய்த்தொற்றை உறுதிப்படுத்த முடியும். அதைத்தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

    காய்ச்சல் இருக்கும் பூனைக்குட்டிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது. பூனைகள் பாராசிட்டமால் மாத்திரையில் உள்ள நச்சுத்தன்மைக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த நச்சுகள் அவற்றின் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை கடுமையாக சேதப்படுத்தி, ஆக்சிஜன் சுழற்சியை நிறுத்துகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல கருப்பு பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஒரு பூனையை ரூ.1000-க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 11 பூனைகளை ஏழு கிணறு போலீசாரின் உதவியோடு மீட்டனர். மீட்கப்பட்ட 11 பூனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணியிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இது குறித்து ஸ்ரீராணி கூறியதாவது:-

    நான் மத்திய அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல கருப்பு பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவை திருடப்பட்ட செல்லப்பிராணிகள் ஆகும். இந்த செல்லப்பிராணிகளை இரவு நேரங்களில் வலைகளை பயன்படுத்தி பிடித்துள்ளனர்.

    சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஒரு பூனையை ரூ.1000-க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தையும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமல்லாது மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து, உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×