search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழு தாக்குதல்"

    • சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
    • ஏக்கருக்கு 5 சதவீதம் 600 மில்லி வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நெற்பயிரில் தற்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தினால் ஆங்காங்கே இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம்.

    நெல் வயல்களில் வளரும் அல்லது தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கிறது. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு புழுக்கள் அதன் உள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும். இப் பூச்சியின் தாக்குதல் இருக்கும்போது தழைச்சத்து உரம் இடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் புழுக்கள் பச்சையான நிறத்திலும் ஒளி கசியும் தன்மை கொண்டும், முன் மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும் பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் வரை கூட்டுக் புழுக்களாக இருக்கும். அந்து பூச்சியான முதிர் பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும்.

    நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல், களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு அசியேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணெய் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
    • மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சுமார் 5000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, ஆத்மா திட்ட மேலாளர் அரவிந்த், அலுவலர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த நேரடி விதைப்பு பயிரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா கூறுகையில் நெற்பயிரில் பரவலாக குருத்துப் புழு தாக்குதல் இருந்து வருகிறது.

    இந்த மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும் என்றார்.

    ×