search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புல்வாமா என்கவுண்டர்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaEncouter #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #PulwamaEncouter #JKEncounter
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #JammuAndKashmir #PulwamaEncounter
    புல்வாமா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கும்படி பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். நேற்று இரண்டு நபர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பாப்கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    இதில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகூர் அகமது என்பதும், ராணுவ வீரராக இருந்து, பயங்கரவாதியாக மாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #PulwamaEncounter

    ×