search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகங்கள் விற்பனை"

    • நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு நடைபெற்று வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த புத்தக திருவிழாவை கண்டு களித்து வருகின்றனர்.

    செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இந்த விழாவில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ள 80 அரங்குகளில் மொத்தம் ரூ. 24 லட்சத்து 64,168 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளன.

    • 12 நாளில் ரூ.6.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • றைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 9-ந் தேதி முதல் மாவட்ட நிா்வாகம், கலை இலக்கிய ஆா்வலா்கள் சங்கம் சார்பில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கி நேற்று (20-ந்தேதி) நிறைவடைந்தது.

    முகவை சங்கமம் என்ற தலைப்பில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவில் முதல்-அமைச்சரின் திட்டங்கள் குறித்து செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இல்லம் தேடி கல்வி திட்ட அரங்குகள் உள்பட 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் எழுதிய சுமாா்2.48 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றன. மூலிகை, ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. தினமும் கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனித் திறன் போட்டிகள் நடைபெற்றன.

    புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பொதுமக்கள் என 2.20 லட்சம் போ் பங்கேற்றனா். ரூ.6.35 கோடிக்கு புத்தகங்கள் விற்கப்பட்டன. கொடையாளா்கள் மூலம் 3,500 புத்தகங்கள் வரப் பெற்றன. நிறைவு விழாவில் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கலந்து கொண்டாா். நிறைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    ×