search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of books"

    • சித்தி ரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
    • அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்பல்க லைக்கழ கத்தில் சித்தி ரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விற்பனையை துணை வேந்தா் திருவள்ளுவன் தொடக்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் மட்டுமின்றி, தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞா்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.

    நிகழாண்டு சித்திரை திருநாளையொட்டி, 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் பல்க லைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) தியாகராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் நீலகண்டன், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) கோவைமணி, பதிப்புத் துறை இயக்குநா் (பொறுப்பு) பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொறுப்பு) முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • 12 நாளில் ரூ.6.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • றைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 9-ந் தேதி முதல் மாவட்ட நிா்வாகம், கலை இலக்கிய ஆா்வலா்கள் சங்கம் சார்பில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கி நேற்று (20-ந்தேதி) நிறைவடைந்தது.

    முகவை சங்கமம் என்ற தலைப்பில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவில் முதல்-அமைச்சரின் திட்டங்கள் குறித்து செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இல்லம் தேடி கல்வி திட்ட அரங்குகள் உள்பட 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் எழுதிய சுமாா்2.48 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றன. மூலிகை, ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. தினமும் கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனித் திறன் போட்டிகள் நடைபெற்றன.

    புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பொதுமக்கள் என 2.20 லட்சம் போ் பங்கேற்றனா். ரூ.6.35 கோடிக்கு புத்தகங்கள் விற்கப்பட்டன. கொடையாளா்கள் மூலம் 3,500 புத்தகங்கள் வரப் பெற்றன. நிறைவு விழாவில் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கலந்து கொண்டாா். நிறைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    ×