என் மலர்
நீங்கள் தேடியது "Tamil University"
- சித்தி ரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
- அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ்பல்க லைக்கழ கத்தில் சித்தி ரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விற்பனையை துணை வேந்தா் திருவள்ளுவன் தொடக்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் மட்டுமின்றி, தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞா்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.
நிகழாண்டு சித்திரை திருநாளையொட்டி, 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் பல்க லைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) தியாகராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் நீலகண்டன், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) கோவைமணி, பதிப்புத் துறை இயக்குநா் (பொறுப்பு) பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொறுப்பு) முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது.
- யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி.
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, "தான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும், சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலை தரப்பில் கூறப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது என்றும் சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா ? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் ஏன் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது என்றும் கூறினார்.
- சர்ச்சை காரணமாக பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம்.
- பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டு, இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார்.
ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார். இதனால் அறையின் பூட்டை உடைத்து அவர் பதவியேற்றார். இதுகுறித்த விபரம் வருமாறு:-
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- 18-ம் ஆண்டில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உரிய தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் 40 பேருக்கும் தகுதி காண்பருவம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துணை வேந்தராக இருந்த திருவள்ளுவனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை பொறுப்பு துணை வேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை கவர்னர் நியமித்தார்.
இந்நிலையில் பொறுப்பு துணை வேந்தர் சங்கருக்கும், பேராசிரியர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதிக்கும் பதிவாளர் (பொ) தியாகராஜன் ஓரிரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். அதில் சங்கரின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே அசாதாரண சூழல் ஏற்படும் நிலை உள்ளது.
பல்கலைக்கழக நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக சங்கருக்கு பதிலாக பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதி துணைவேந்தர் பணிகளை கவனிக்க எதிர்வரும் ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பார்த்த பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உடனடியாக பதிவாளர் (பொ) தியாகராஜனுக்கும், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பாளராக தியாகராஜன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.
பல்கலைக்கழக வேந்தரின் (கவர்னர்) ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதாலும், பதிவாளர் பொறுப்பாக பணிபுரிந்து வரும் தியாகராஜனும் இந்த விசாரணை வரம்புக்குட்பட்ட ஒரு கல்வியாளராக இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்து ஆணையிடப்படுகிறது.
அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனை மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யப்படும் வரை பதிவாளர் பொறு ப்பாக நியமனம் செய்து ஆணை இடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு கடிதங்களால் எழுந்த சர்ச்சை காரணமாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பு துணை துணைவேந்தர் சங்கர் உத்தரவுப்படி பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வெற்றி செல்வன் இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக பல்கலைக்கழக ஊழியர்கள் கதவை உடைத்தனர். பின்னர், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் மற்றொரு தனி அறையில் அமர்ந்து உள்ளார்.

பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதிவேற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தமிழ் பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






