என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பரிசு வழங்கல்"
- 12 நாளில் ரூ.6.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- றைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 9-ந் தேதி முதல் மாவட்ட நிா்வாகம், கலை இலக்கிய ஆா்வலா்கள் சங்கம் சார்பில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கி நேற்று (20-ந்தேதி) நிறைவடைந்தது.
முகவை சங்கமம் என்ற தலைப்பில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவில் முதல்-அமைச்சரின் திட்டங்கள் குறித்து செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இல்லம் தேடி கல்வி திட்ட அரங்குகள் உள்பட 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் எழுதிய சுமாா்2.48 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றன. மூலிகை, ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. தினமும் கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனித் திறன் போட்டிகள் நடைபெற்றன.
புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பொதுமக்கள் என 2.20 லட்சம் போ் பங்கேற்றனா். ரூ.6.35 கோடிக்கு புத்தகங்கள் விற்கப்பட்டன. கொடையாளா்கள் மூலம் 3,500 புத்தகங்கள் வரப் பெற்றன. நிறைவு விழாவில் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கலந்து கொண்டாா். நிறைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.
- வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேரு இளைஞர் மையம், தருமபுரி மற்றும் ரங்காபுரம் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
டக்க நிகழ்ச்சியில் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேரு இளைஞர் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.
பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சின்னபள்ளத்தூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் பழன,உடற்கல்வி ஆசிரியர்கள் சம்பத்குமார், ரங்காபுரம் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் இளைஞர் நற்பணி சங்கம் தலைவர் முருகன,ஞானராஜ் முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்