search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பிக்கும்"

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் உள்ள டங்கிய கோவில் ஆகும்.

    அதேபோல் இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி பரிகார ஸ்தலம், சுற்றுலா ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    தினசரி இந்த கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து காவிரியில் புனித நீராடி பரிகார பூஜை செய்து பின்னர் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு இந்து அறநிலைய த்துறை சார்பில் தினசரி அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான மண்டபத்தின் மேற்கூரைகள் சிமெண்ட் சீட்டினால் தற்போது உள்ளதை அப்பு றப்படுத்தி விட்டு புதிதாக ஓடுகள் மேய்ந்து மேற்கூ ரைகள் அமைக்க இந்து சமய அறநிலைத்துறை உத்த ரவு வழங்கியது. இதனைத் தொடர்ந்து 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும். 

    ×