search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய திட்ட பணிகள்"

    • ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒட்டுமொத்தமாக பணிகளை மேற்கொள்ள ரூ.86.2 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்க 15 வார்டு கவுன்சில ர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேரூரா ட்சிக்கு ட்பட்ட 15 வார்டு களிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூ டம், பொது கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானி க்கப்பட்டது.கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    • துப்புரவு பணிக்கு கூடுதலாக 5 பேர் நியமனம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.58.30 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, ரூ.30.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ரூ.2.81 லட்சத்தில் புதிய கல்வெர்ட் அமைப்பது எனவும்.

    ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.91.61 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூடம், பொது கழிப்பிடம், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 120க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன இதில் சுகாதார பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் 20 நபர்கள் மட்டுமே உள்ளனர்.

    இதனால் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் தற்போது தற்காலிகமாக தூய்மை பணி மேற்கொள்ள 5 நபர்கள் பணி அமர்த்திகொள்ள கவுன்சி லர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ.6.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக ரூ.72,27,000 லட்சம் திட்டப்பணிகள்.
    • அனைத்து பணிகளையும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஏர்ரபையனஹள்ளி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதிகள் கழிவுநீர் கால்வாய் குடிநீர் மற்றும் சாலை சமுதாயக்கூடம் உள்ளிட்ட திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி மாவட்ட ஊராட்சி குழு நிதி மற்றும் ஊராட்சி நிதியிலிருந்து நிதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படுகின்றன அவற்றினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஈச்சம்பள்ளம் கிராமத்தில் பல்னோக்கு சமுதாய கூடம், நெக்குந்தி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஊராட்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், நெக்குந்தி கிராமத்தில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுதல், ரூ. 6.70 லட்சம் மதிப்பீட்டில் கருபையனஹள்ளி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைத்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஏரியை சீரமைத்து கரையை பலப்படுத்துதல் சுமார் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. கெட்டுஅல்லி கிராமத்தில் ஊராட்சி பொது நிதியிலிருந்து 5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தாசன் கோட்டை கிராமத்தில் தனி நபர்களுக்கு குடிநீர் வழங்கல் திட்டத்திற்காக ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு, மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து தாசன் கொட்டாய் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ.6.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக ரூ.72,27,000 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் அனைத்தும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். முன்னிலை சாந்த மூர்த்தி மாநில துணைத்தலைவர், மகேஸ்வரி பெரியசாமி நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர், சரஸ்வதி முருகசாமி மாவட்ட குழு துணை தலைவர், அறிவழகன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கணேசன் ஒன்றிய கவுன்சிலர், பழனியம்மாள் முருகேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ரஞ்சித் குமார் துணை தலைவர் முனுசாமி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×