search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டிடம்"

    • திருவாடானையில் அரசு மருத்துவமனை பிணவறை பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையானது தாலுகாவின் தலைமையிடமாகும். இந்த தாலுகாவை சுற்றிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாலுகா அரசு பொது மருத்துவ மனையாக திருவாடானையில் உள்ள அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் எந்த அடிப்படை வசதியுமின்றி பழுதடைந்து ஜன்னல், கதவு உடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிணவறை கட்டிடம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இது வேதனை அளிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக இங்கு தரையில் கிடத்தப்படும் அவலநிலை தான் உள்ளது.

    குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. பழுதடைந்த இந்த கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு நவீன வசதிகளோடு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • சமுதாய நல நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • இந்த பணிகள் நிறைவுபெற்று இன்று கட்டிட திறப்பு விழா நடந்தது

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் சமுதாய நல நிலையத்தில் அம்பிகா காட்டன் மில் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைத்தல், பேவர் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.8 லட்சம் மதிப்பில் நடைபெற்றது.இந்த பணிகள் நிறைவுபெற்று இன்று புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.

    இதற்கு துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) வரதராஜன் தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் மோகன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் அம்பிகா காட்டன் மில் பொது மேலாளர் வீரக்குமார், பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சலேத்மேரி ஜான் பீட்டர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக கண்காணிப்பாளர் மைக்கேல் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், அழகுராஜா, குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×