search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை விற்றவர் கைது"

    • தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி, ஜூலை.16-

    தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீசார் ஜவகர்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முத்துராம்(36) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து புகையிலைபொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது
    • நத்தம் பகுதியில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    செந்துறை:

    நத்தம் முஸ்லிம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (35).

    இவர் நத்தம் அவுட்டர் செந்துறை சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் டீக்கடையை சோதனை செய்தனர்.அப்போது 30 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து அலாவுதீனை போலீசார் கைது செய்தனர்.

    ×