என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்."
- பெட்ரோல் டேங் முழுவதும் தண்ணீர் இருந்து உள்ளது.
- சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை சித்தாபுதூர் பகுதியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர்கள் பாண்டியன் மற்றும் குணசேகரன். இவர்களிடம் உள்ள கார்களை வாடகைக்கு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கார் டிரைவர் ரமேஷ் என்பவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் 40 லிட்டர் பெட்ரோலை அடித்து உள்ளார்.
அதன் பின்னர் அவர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது அந்த கார் திடீரென பாதி வழியில் நின்றது. இதனால் அவர் கார் மெக்கானிக்கை வரவழைத்து காரை பரிசோதித்து பார்த்த போது பெட்ரோல் டேங் முழுவதும் தண்ணீர் இருந்து உள்ளது.
இதனை கேட்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
பின்னர் ரமேஷ் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்