search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பொருட்கள்"

    • 56 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மீறி பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவோர் மீது அபராதம் விதிக்கப்படும்

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் வர்த்தக நிறுவனங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் 56 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1400 அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, மேற்பார்வையாளர்கள் சக்தி, முருகன், பாலா, காளிதாஸ், திலக் மற்றும் பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை நகராட்சி தலைவர் சஹனாஸ் ஆபிதா, கவுன்சிலர்கள் நஸ்ருதீன், மீரான் அலி ஆகியோர் முன்னிலையில் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறுகையில், கீழக்கரை பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்ககூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவு அலுவலர்கள் தினமும் சோதனை செய்வார்கள். மீறி பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

    கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்கினால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம், தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

    • பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை திடீரென திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதேபோல் தொடர்ந்து கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மத்திய அரசு கடந்த 1-ந்தேதி பிளாஸ்டிக் கேரிப்பை போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தது. இதன்படி தமிழக அரசு பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவுரையில் விழுப்புரம் நகர சபை தலைவர் தமிழ்ச்செல்வி விழுப்புரம் நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் ரமணன், சுகாதாரப் பணி யாளர்கள் உள்ளிட்டோர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் சிறு சிறு கடைகள் சாலை ஓரங்களில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.

    மேலும் விழுப்புரம் பாகர்சா மற்றும் மகாத்மா காந்தி சாலை இரு வீதிகளிலும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தமிழரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 20 கிலோ முதல் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தில்10,000வரை வசூலிக்கப்பட்டது.

    மேலும் பறிமுதல் வேட்டை பின் கமிஷனர் இது குறித்து கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதை மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அங்குள்ள காய்கறி கடை பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை வைத்திருக்கும் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தார். 

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை காரணமாக பார்சல் சாப்பாடு விலை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் ஓட்டல்களில் பார்சல் வாங்கும் போது சாம்பார், ரசம், மோர், காய்கறி போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கப்பட்டு வந்தது. அவை அனைத்தும் பிளாஸ்டிக் பைகளிலேயே வினியோகம் செய்யப்பட்டது.

    தற்போது அதற்கு மாற்றாக ஓட்டல்கள் அனைத்திலும் மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் குவளைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பைகள் விலை உயர்வு என்பதால் பார்சல் கட்டணமும் உயர்ந்துள்ளது.

    பஸ் நிலையம் அருகே உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இது போன்ற பைகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒரு பார்சல் சாப்பாடு ரூ.80 என இருந்த நிலையில் தற்போது ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் காலை சிற்றுண்டியும் மாற்று பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் தெரிவிக்கையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தற்போது எளிதில் மக்கும் தன்மை கொண்ட அரசால் சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை உயர்வு என்ற போதும் வாடிக்கையாளர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

    அடுத்த முறை வரும் போது பாத்திரம் எடுத்து வருவதற்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கிறோம். சிறிய ஓட்டல்களில் நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயர்வு மிகுந்த சுமையை ஏற்படுத்தும். அவர்களும் விரைவில் பழைய நிலைக்கே பாத்திரம் கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல பழகிக் கொள்வார்கள் என்றனர்.

    ×