search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் கவர்கள்"

    • சிக்கன் மற்றும் மட்டன் கடைகளில், பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு
    • 13 கடைகளில் ஆய்வு செய்வதில், சுமார் 6 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் தக்கலை பகுதிகளில், ஆணையாளர் லெனின் உத்தரவின் பேரில், சிக்கன் மற்றும் மட்டன் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்கின்ற ஆய்வு நகராட்சி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் ஆகியோர்கள் தர்கா ரோடு பகுதிகளில் உள்ள சிக்கன் மற்றும் மட்டன் உள்ளிட்ட 13 கடைகளில் ஆய்வு செய்வதில், சுமார் 6 கிலோ அளவுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன், சிவக்குமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

    • வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.
    • மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பாலிதீன் பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1 முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.ஆனால் தடை உத்தரவை மீறி, திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக்காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பலமுறை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டன.

    தற்போது வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.கடந்த ஓராண்டுக்கு முன் தடை உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இனி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்த பொதுமக்களும், துணி பைகளுக்கு மாறினர். இதனால் துணிப்பைகளின் பயன்பாடு அதிகரித்து, ஜவுளி உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது காலமே நீடித்தது. மீண்டும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

    மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம். தடை உத்தரவை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள், இவற்றை கண்காணித்து பிளாஸ்டிக் பைகளை அழிப்பதுடன் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

    ×