search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிவு சாலை"

    • 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும்

    திருப்பூர்:

    பல்லடம் வழியாக செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சாலை விரிவாக்கத்துக்குப் பின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் காளிவேலம்பட்டி பிரிவு அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஒருசில விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    ×