search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி."

    • வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன
    • நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஜூலை 19 அன்று தொடங்கிய 4-வது ஜி-20 EWG மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சர்களின் சந்திப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகளாவிய பணியாளர்களின் நலத்திற்கான செய்தியாக இந்த சந்திப்பு அமைந்திருப்பதாக நான் நம்புகிறேன். அதிக அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வாய்ந்த பணியாளர்களை உலகிற்கே வழங்கும் நாடாக திகழ இந்தியாவிற்கு தகுதி உள்ளது.

    நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது. கடந்த தொழில்நுட்ப புரட்சியின்போது அதிகளவில் வேலைவாய்ப்புகளை இந்தியாதான் உருவாக்கியது. அதனாலேயே இந்த சந்திப்பு இங்கு நடைபெறுவது சிறப்பானது. பல "ஸ்டார்ட் அப்" (start-up) நிறுவனங்கள் இந்தூரில் தொடங்கப்பட்டு வருகிறது.

    ஓரிடத்திலேயே தங்கி பணியாற்றாமல், வீட்டிலும் அலுவலகத்திலும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் திறமைகளை வெளிப்டுத்தும் ஒரு பணியமைப்பு உருவாகி விட்டது. இதனை வளர்ப்பதறற்கு ஜி-20 தலைமை தாங்க வேண்டும்.

    வேலைவாய்ப்புகளுக்காக கல்வித்தகுதி மற்றும் பணித்திறனின் அடிப்படையில் ஒரு உலகளாவிய பட்டியலிடுதலுக்கான உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

    வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன. இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் விதத்தில் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    திறன் வளர்த்தல், திறன் மறுசீராய்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் ஆகியவையே நமது மந்திரமாக கொள்ள வேண்டும். இந்தியாவில் திறன் இந்தியா திட்டம் இதற்காகவே கொண்டு வரப்பட்டது.

    செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், ஐஓடி மற்றும் டிரோன் தொழில்நுட்பம் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்
    • 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக அவர் இன்று பிற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளம் வருகிறார் பிரதமர். அங்கிருந்து தொடக்க விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார். 

    ×