search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னாலடை"

    • காற்று, நிலம், நீர் மாசுபடாமல் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்
    • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காற்று, நீர், நிலம் மாசுபடாத உற்பத்தி என்ற தரச்சான்று அவசியம்.

    திருப்பூர்:

    புதிதாக ஏற்படுத்தப்ப ட்டுள்ள சர்வதேச ஜவுளி கொள்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காற்று, நிலம், நீர் மாசுபடாமல் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை முக்கியமானது.கொரோனாவுக்கு பிறகு இயற்கை மாசு ஏற்படுத்தாத பசுமை சார் உற்பத்தி என்ற அங்கீகார தரச்சான்று இருக்கும் ஆடைகளையே வெளிநாட்டு மக்கள் வாங்கி அணிகின்றனர்.

    திருப்பூரில் இயங்கும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம், சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகளும் புதிய அங்கீகார தரச்சான்று பெற வேண்டியது கட்டாயமாகி விட்டது. கிரீன் டேக் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. தற்போது கார்பன் கிரெடிட் என்ற சான்றும் அவசியமாகிறது.சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் பயன்படுத்தும் இங்க் மற்றும் ரசாயனத்தின் தன்மை, இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காக கார்பன் கிரெடிட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.குறிப்பிட்ட நாடுகளில் கார்பன் கிரெடிட் சான்றிதழ் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வர்த்தகம் செய்ய முடியும். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என பல்வேறு நாட்டு மக்களும் விரும்புகின்றனர். ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் திருப்பூர் அவர்களின் தேர்வாக இருக்கிறது. இனிவரும் நாட்களிலும் ரசாயன பயன்பாடு, இங்க் பயன்பாடு உள்ளிட்ட பணிகளிலும் அங்கீகார தரச்சான்று பெற்றிருக்க வேண்டியதும் அவசியமாகி யுள்ளது.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அதன்படி அங்கீகார தரச்சான்று பெற்றிருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்கின்றனர். தூய ரசாயனம் - தூய செயலாக்கம் - தூய தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்து கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காற்று, நீர், நிலம் மாசுபடாத உற்பத்தி என்ற தரச்சான்று அவசியம்.

    அதற்காக அடல் இன்குபேஷன் மையம் உதவியுடன் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தரச்சான்று நிறுவனங்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம் என்றார். 

    • கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினராக இருந்து வரும் நிலையில் சங்கத்தை அந்த கவுன்சிலில் ஆயுட்கால உறுப்பினராக மாற்றுவது என்றும், அதற்காக சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்வது என்றும், பின்னலாடை தொழில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் மின்கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் மந்தநிலை காரணமாக வங்கிகள் கடன் பெற்றவர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தொழிலை காப்பாற்ற வங்கிகள் வழங்கிய கடனை குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் இ-இன்வாய்ஸ் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏ.எக்ஸ்.என். நிறுவனம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேபோல் சங்க உறுப்பினர்கள் தங்களது நிறுவனங்களுக்கு காப்பீடும் செய்யும்போது அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், காப்பீடு செய்யாவிட்டால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் விளக்கமளித்தனர்.

    ×