search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பினாமி சொத்துக்கள்"

    2017-18 நிதி ஆண்டில் ரூ.100 கோடி வருமானம் உடையவர்கள் 61 பேர்தான் என்று நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

    அதில் அவர், “நமது நாட்டில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டில், ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும், அதற்கு மேலும் வருமானம் ஈட்டியதாக 61 தனிநபர்கள் மட்டுமே கணக்கு காட்டி உள்ளனர்” என கூறி உள்ளார்.



    2016-17 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 38 ஆக இருந்து உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மற்றொரு கேள்விக்கு நிதித்துறையின் மற்றொரு ராஜாங்க மந்திரியான சிவபிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், “பினாமி சொத்து சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.6 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார். #PonRadhakrishnan

    ஐக்கிய அரபு நாட்டில் இம்ரான்கான் தங்கைக்கு பினாமி பெயரில் சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #ImranKhanSister #BenamiProperty
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதுகுறித்து பெடரல் புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.



    அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தங்கை அலீமாகான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் ஐக்கிய அரபு நாட்டில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

    அதைதொடர்ந்து அவருக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அப்போது வீட்டில் அலீமாகான் இல்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாக வேலைக்கார பெண் தெரிவித்தார்.

    இவர் தவிர பாகிஸ்தானை சேர்ந்த மேலும் 44 அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் ஐக்கிய அரபு நாடுகளில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ImranKhan #ImranKhanSister #BenamiProperty

    ×