search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடித்து எரிந்தது"

    • சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.
    • கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி மூன்றோடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி நாயக்கர். விசைத்தறி தொழில் செய்து வருகி ன்றார். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட துண்டு களை அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு ஒலகடம் வழியாக பவானி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒலகடம் பேரூராட்சி செல்லும் வீதியின் முன்பு கார் வந்த கொண்டிருந்த போது கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. இதனையடுத்து வீட்டு சிலிண்டரை கொண்டு காரின் பேட்டரி உதவியுடன் சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.

    அப்போது அருகில் இருந்த ரங்கசாமி நாயக்கர் கார் தீப்பிடிப்பதை கண்டு அங்கிருந்து சிறிதுரம் நகர்ந்து நின்றார். உடனடி யாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு நிலைய வாகனம் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரங்கசாமி நாயக்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியினார்.

    இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனால் ஒலகடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×