search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிச்சிப்பூ"

    • கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு
    • தோவாளை சந்தையில் விற்பனை அமோகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய் மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்ேகாவில், ராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவும் வருகின்றன.

    இதேபோல், சேலத்தில் இருந்து அரளிப்பூ, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ் போன்றவையும், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களும் தினமும் விற்பனைக்கு வரு கின்றன. அவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றன.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தோவளை சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழா மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்றவை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைவாக இருப்பது பூக்களின் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.ஆயிரத்து 750-க்கும், சம்பங்கி ரூ.250க்கும், சேலம் அரளி ரூ.220-க்கும், உள்ளூர் அரளி ரூ.200-க்கும், பட்டர் ரோஸ் ரூ. 200-க்கும், முல்லைப்பூ ரூ. ஆயிரத்து 700-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், கோழிப்பூ ரூ.80-க்கும்,மஞ்சக் சேந்தி ரூ.60-க்கும், சிகப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதேபோல், மரிக்கொழுந்து, தாமரை, அருகம்புல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    ×