search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் துன்புறுத்தல்கள்"

    • கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள்.
    • தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள்.

    திருச்சி:

    அரபு நாடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கு செல்லும் தமிழகப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மீனா (வயது 35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஜெண்ட் மூலமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டார்.

    இரண்டு ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே வீட்டு வேலை செய்து வந்த அவரின் விசா காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறித்து விட்டு அங்குள்ள ஒரு அறையில் அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அங்குள்ள சிலர் முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மூலமாக, துபாயில் தங்கி தொழில் செய்து அறக்கட்டளை நடத்தி வரும் அன்வர் அலி என்பவர் உதவியை நாடினார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி விமான டிக்கெட் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

    சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கூறும்போது,

    அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனக்கும் அவர்கள் குறி வைத்தார்கள். நான் ஒரு வழியாக அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டேன். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

    இதுபற்றி அன்வர் அலி கூறும்போது, அரபு நாடுகளில் உள்ள வீடுகளில் சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலை, வீட்டு வேலைகள் காலியாக உள்ளன. இதற்கு கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள்.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் உள்ள நர்சுகள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை இந்த புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள். இவ்வாறு வேலை தேடி வரும் பெண்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையை தெரிந்துகொண்டு பாஸ்போர்ட், விசா, போக்குவரத்து செலவுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு அவர்களை அழைத்து வந்து தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். பின்னர் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அடிமைகளாக விற்பனை செய்கிறார்கள். திருச்சி பெண் மீனா எனது உதவியை நாடியதால் தப்பித்துக் கொண்டார். இல்லையென்றால் அவரையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி இருப்பார்கள்.

    எனவே வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வேலையை ஆராய்ந்து வர வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் இங்கு இன்னல்களை அனுபவித்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

    திருச்சி மாவட்டம் நிர்வாகமும் அப்பாவி பெண்களை ஏமாற்றி அனுப்பும் போலி ஏஜெண்டுகளை இனம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கள்ளக்குறிச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பணியிடங் களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை யின் சார்பாக அமைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தின்கீழ் செயல்படும் வட்டார அளவி லான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் (10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அலுவலக உட்புகார் குழு அமைத்திட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணிபுரி யும் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாலியல் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் வரும் புகார்களை கையாள தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உட்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×