search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரா ஆசிய விளையாட்டு போட்டி"

    • பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 17 பதக்கங்களை வென்றுள்ளது.
    • இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

    சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இதன் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

    தற்போது இந்தியா வென்று இருக்கும் 17 பதக்கங்களில் 11 பதக்கங்கள் டிராக் அண்ட் ஃபீல்டு பிரிவுகளில் இருந்தே கிடைத்துள்ளன. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.

    இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதேபோன்று ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    போட்டியை நடத்தும் சீனா 31 தங்கம், 29 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஈரான் 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    • ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம்.
    • இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.

    ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியது. இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

    அதன்படி, F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் , அமித் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

    இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    தற்போதுவரை இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களுடன் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.

    Another Golden Triumph for ?? at #AsianParaGames ?#ParaAthletics

    • பாரா ஆசிய விளையாட்டில் உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களையும் இந்தியர்களே வென்றனர்.

    சென்னை:

    பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என பதிவிட்டுள்ளார்.

    ×