search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் மாண்டிசோரி பள்ளி"

    • மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    • வேதியியல் பாடத்தில் மாணவி அனுசியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    தென்காசி:

    பிளஸ்-1 பொதுத்தேர்வை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 63 பேர் எழுதினர். மாணவி ஹரிணி சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெ ண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், வணிகவியலில் 76 மதிப்பெ ண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதத்தில் 80 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்தனர். மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், வேதியலில் 94 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 73 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி அனுசியா தமிழில் 75 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 86 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும் பாடவாரியாக தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெ ண்களும், சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெ ண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

    • கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார்.
    • விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனம் நடைபெற்றது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கணிப்பொறி ஆசிரியை ஜோஸ்பின் ஸ்னேகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை உமா வரவேற்றார். கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார். ஆசிரியை சுப்புலட்சுமி கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். துணைமுதல்வர் பாலசுந்தர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு சிறந்த கல்வியாளருக்கான ஏகலைவன் விருதை வழங்கினார்.

    விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனமும், தேவி, விஜயலட்சுமி ஆகியோரின் ஆசிரியர் தின ஆங்கில உரையாடலும் நடைபெற்றது. மஞ்சுளா குழுவினரின் வில்லுப்பாட்டும், அப்துல்லா குழுவினரின் சைகை நாடகமும் நடைபெற்றது. ஆசிரியர் ஜீவா பாடல்கள் பாடினார். சிறப்பு விருந்தினர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்புரையாற்றி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஆசிரியர் பண்ணிசைப் பாடலுடன் விழா நிறைவு பெற்றது. பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • கட்டுரைப் போட்டியில் தென்காசி, நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் சர்வின் தனிஷ்கர் 2-ம் இடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

    தென்காசி:

    நெல்லை அறிவியல் மையத்தில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. தென்காசி, நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 'அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கட்டுரைப் போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் சர்வின் தனிஷ்கர் 2-ம் இடம் பெற்றுச் சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சான்றிதழ், வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் சாதனை படைத்த மாணவர் சர்வின் தனிஷ்கரைப் பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    ×