என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா
- கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார்.
- விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனம் நடைபெற்றது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கணிப்பொறி ஆசிரியை ஜோஸ்பின் ஸ்னேகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை உமா வரவேற்றார். கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார். ஆசிரியை சுப்புலட்சுமி கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். துணைமுதல்வர் பாலசுந்தர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு சிறந்த கல்வியாளருக்கான ஏகலைவன் விருதை வழங்கினார்.
விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனமும், தேவி, விஜயலட்சுமி ஆகியோரின் ஆசிரியர் தின ஆங்கில உரையாடலும் நடைபெற்றது. மஞ்சுளா குழுவினரின் வில்லுப்பாட்டும், அப்துல்லா குழுவினரின் சைகை நாடகமும் நடைபெற்றது. ஆசிரியர் ஜீவா பாடல்கள் பாடினார். சிறப்பு விருந்தினர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்புரையாற்றி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.
தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஆசிரியர் பண்ணிசைப் பாடலுடன் விழா நிறைவு பெற்றது. பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்