என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாம்பு படகு போட்டி"
- பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன் முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
- போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பாம்பு படகுகள் பங்கேற்றன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் படகு போட்டிகள் பிரபலமானது. இதில் குறிப்பாக பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த போட்டியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. இந்த ஆண்டுக்கான பாம்பு படகு போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பாம்பு படகுகள் பங்கேற்றன. இந்த படகுகள் ஒன்றை ஒன்று முந்திச்செல்வது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- கொரோனா பிரச்சினையால் படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
- தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான ஆறுகள், நதிகள் உள்ளன.
இந்த நதிகளில் ஆண்டுதோறும் படகு போட்டி நடைபெறும். இதில் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த போட்டியில் சுண்டன் படகு எனப்படும் பாம்பு படகுகள் பங்கேற்கும். ஒவ்வொரு படகிலும் வீரர்கள் துடுப்புகளுடன் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் வஞ்சிப்பாட்டு மற்றும் தாள கருவிகளை இசைத்தபடி போட்டியில் பங்கேற்பார்கள். இந்த போட்டியை காண வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொரோனா பிரச்சினையால் இந்த படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.
சம்பகுளம் பம்பை நதியில் நடைபெறும் இந்த போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. நாளை மதியம் 2.10 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை கேரள வேளாண்துறை மந்திரி பிரசாத் தொடங்கி வைக்கிறார். கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த படகு போட்டியை போன்று நடைபெறும் இன்னொரு பிரசித்தி பெற்ற படகு போட்டி நேரு கோப்பை படகு போட்டியாகும்.
இந்த போட்டி செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நடக்க உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்