search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபாவின் புகழ்"

    • பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள்.
    • ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.

    பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள்.

    அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார்.

    பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார்.

    தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்.

    பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது.

    பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர்.

    அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினர்.

    பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார்.

    இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.

    ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.

    பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது.

    பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர்.

    ×