search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான் குல்கந்து கேக்"

    • பழங்கால பழமையான பானின் சுவையை கேக்கில் இணைக்கப்போகிறோம்.
    • குல்கந்த் இல்லாமல் பான் முழுமையடையாது.

    இன்றைய பான் கேக் ரெசிபியில், பழங்கால பழமையான பானின் சுவையை கேக்கில் இணைக்கப்போகிறோம். பான் ஒரு பிரபலமான வாய் ப்ரெஷ்னர். கேக்கில் உள்ள இந்த தனித்துவமான சுவை மிகவும் அருமை. குல்கந்து இல்லாமல் பான் முழுமையடையாது. குல்கந்து என்பது ரோஜா இதழ்களின் இனிப்பு. எனவே நமது இன்றைய கேக் வெறும் பான் கேக்காக மட்டும் இருக்கப் போவதில்லை, மாறாக அது பான் குல்கந்த் கேக்காக இருக்க போகிறது. வாங்க எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவைப்படும் பொருட்கள்:

    மைதா மாவு - 175 கிராம்

    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

    பால்- 50 கிராம்

    இளம் வெற்றிலைகள்- 5

    வினிகர் - 2 டீஸ்பூன்

    சமையல் எண்ணெய் - 75 மி.லி.

    பொடித்த சர்க்கரை- 150 கிராம்

    பச்சை நிறம் - 2 துளிகள்

    கிர்ணி பழ விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

    வெற்றிலை எசன்ஸ் - 2 துளிகள்

    குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்

    பொடித்த பிஸ்தா பகுப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வெற்றிலைகளை 40 மி.லி. தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

     அகலமான கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிக் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பாலையும், வினிகரையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். இப்போது பால் திரிந்து இருக்கும்.

     மற்றொரு கிண்ணத்தில் எண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை கொட்டி நன்றாக அடித்து கலக்க வேண்டும். அதனுடன் மைதா மாவு கலவை. பால்- வினிகர் கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

     பின்னர் அதில் வெற்றிலை சாறு, வெற்றிலை எசன்ஸ், பச்சை நிறம் மற்றும் குல்கந்து, கிர்ணி பழ விதைகள் மற்றும் பொடித்த பிஸ்தா ஆகியவற்றை போட்டு மீண்டும் நன்றாக கலக்க வேண்டும்.

     இந்த கலவையை கேக் தயாரிக்கும் டிரேயில் ஊற்றி. 40 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். இறுதியா கிர்ணி பழ விதைகள் மற்றும் பிஸ்தா பருப்புகள் கொண்டு கேக்கை அலங்கரித்து பரிமாறலாம்.

    ×