search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு கேட்டு தஞ்சம்"

    • சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • காதல் தம்பதியர் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பூமணிகண்டன் (25). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் மளிகை பொருட்கள் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் முத்துகுமார். டீ கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜனனிபிரியா (21) கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஜனனி பிரியாவுடன், பூமணிகண்டனின் தங்கையும் படித்து வருவதால் ஜனனிபிரியா அடிக்கடி பூமணிகண்டன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

    இதனால் ஜனனிபிரியா, பூமணிகண்டன் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளப்பியது.

    அதைத்தொடர்ந்து காதலர்கள்2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    இதேபோல் புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி மகள் ராகவி (18). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நஞ்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (23). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு பெரிச்சிகவுண்டன் புதூரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அந்தஸ்து காரணமாக இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    அதைத்தொடர்ந்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள பவளமலையில் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் மணமகன்களின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து காதல் தம்பதியர் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.

    • காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, தம்பிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (24). டிப்ளமோ முடித்து பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நர்மதா (23) பி.எஸ்.சி. பட்டதாரி. 2 பேரும் ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 13-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களால் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தங்கதுரை, நர்மதா தம்பதிகள் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்களை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து தங்கதுரை, நர்மதா மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

    ×