search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிக்கப்பட்டவர்கள்"

    • 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவீனத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
    • பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.

    மயிலாடுதுறை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சாலை விபத்தால் எற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மை காக்கும் 48திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள் பிற மாநிலத்தவர் வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும்கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரைகட்டணமின்றி மருத்துவ சிகிச்சைஅளிக்கப்படும்.

    தேர்தெடுக்கப்பட்ட81 மருத்துவ சிகிச்சை முறைகளு க்கு நபர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம்வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இத்திட்டத்தில் சாலை விபத்தில்பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாகஅனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம்வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81) சிகிச்சை அளிக்கப்படும் 48 மணி நேரத்திற்குமேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சைநடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளிமேற்கொள்ளும் சிகிச்சை திட்டத்தில் அங்கீகரிக்கப்ப ட்டிருத்தல் நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவ மனையிலேயே மேல் சிகிச்சை தொடரலாம்.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவ மனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார்காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சை பெற விரும்பினால், நோயாளியைநிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனி நபரோசெ லுத்தி சிகிச்சை தொடரலாம்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 2327 நபர்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இத்திட்டத்தில் பயன டைந்த மயிலாடுதுறை மாவட்டம்சின்னக்குடியை சேர்ந்த ஜனகன் என்பவர் தெரிவித்தாவது நான் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழந்து பலத்த காயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

    நம்மைகாக்கும் 48 திட்டத்தால் தற்போது மூச்சு குழாயில் குழாய் பொருத்தப்பட்டு குணமடைந்து வருகிறேன் முதலமைச்சருக்கு நன்றி.அராயபுரத்தை சேர்ந்த அன்புமணி தெரிவித்தாவது நான் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் நேருக்குநேர் மோதியதில் பலத்த காயம டைந்து அரசு பெரியார் மருத்துவமனையில் இத்திட்ட த்தில் சிகிச்சை பெற்று முதல் அமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.

    ×