search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடி அசத்தும்"

    • சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
    • அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது. சேலம் மத்திய சிறையில் சிறை வாசிகளுக்கு அங்கீக ரிக்கப்பட்ட அறக்கட்டளை பயிற்சியாளர்களை கொண்டு இசைப் பயிற்சி வாத்தியங்கள் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் முறையாக கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டு சிறைச்சாரல் இசைக் குழு என்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறைச்சா லைக்குள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவர்கள். இதனிடையே சிறையில் ஒத்திகையில் ஈடுபட்ட சிறைச்சாரல் குழுவினர், உன் மதமா என் மதமா என்ற தத்துவ பாடலை பாடி அசத்தியுள்ளனர். சிறைவாசிகளின் மறு வாழ்வுக்காக தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த குழுவினர் புதிய உத்வே கத்துடன் செயல்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×