search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக நிர்வாகி"

    • விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
    • உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலை அருகே சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள ஒரு தையற் கடையில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்குமார் ஆகிய இருவரும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.

    பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து, சப்- கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், எந்தவித அனுமதியின்றியும் மத்திய அரசின் திட்டத்தில் கடனுதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு விநியோகித்த விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள், கணினிகளை பறிமுதல் செய்தும், மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில்:-

    "தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம், ஆனால் இங்கு உரிய அனுமதி பெறாமல் தையற் கடையில் வைத்து சிலர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது போன்ற செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினார்.

    உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    • பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர்.
    • அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

    அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாற்றினார்.

    இத்தகு முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,

    "சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.

    நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவை அடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக அவரிடம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அஸ்வந்த் பிஜய் பொய் சொல்லியுள்ளார். பிரதமரிடம் சொன்ன தகவல் யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவாக வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் மாட்டிக்கொண்டுள்ளார்.

    இதனையடுத்து தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே சமயம் பிரதமரிடம் பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார்.
    • நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் ஜன்னத் (வயது 29). இவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இரவில் நள்ளிரவில் திருப்பூண்டி சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்ராம் (35) என்பவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.

    அப்போது சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார். இதனை கேட்ட புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும். பணியின்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? நீங்கள் டாக்டராக என்று சந்தேகம் உள்ளது. ஹிஜாப்பை கழற்றுங்கள் என கூறி ஜன்னதிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.

    அதற்கு ஜன்னத், நள்ளிரவில் ஒரு பெண்ணிடம் வீணாக தகராறில் ஈடுபடாதீர்கள் என கூறியும் புவனேஷ்ராம் தொடர்ந்து ஹிஜாப் குறித்து பேசி தகராறில் ஈடுபட்டார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, ம.ம.க, ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமையில் ஆஸ்பத்திரி அருகே வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்வராமை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    • வழக்கு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர், இரு மதங்களை சேர்ந்தவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தைத் துாண்டும்விதமாக சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிட்லப்பாக்கம் போலீசார் 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கில், 'பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும்வகையில் கருத்துகளை பதிவிட மாட்டேன்' என்ற பிரமாணபத்திரத்தை அவர் தாக்கல் செய்தார்.

    அதை மீறி, பிற மதம் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுவருவதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கல்யாணராமனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரின்படி, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஜாராணி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கிறேன். அவர் ஏற்கனவே 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை சிறையில் இருந்துள்ளார். இந்த நாட்களை தண்டனைக் காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார். தண்டனைக் காலத்தைவிட ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள் அதிகம் என்பதால், இந்த தீர்ப்பால் கல்யாணராமன் மீண்டும் சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.

    • தமிழக அரசு பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை என்பது போன்று நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
    • புகாரின் பேரில் நிர்மல்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருப்பவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இவர் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை என்பது போன்று தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மல்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று நிர்மல்குமார் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 நாட்கள் தி.மு.க. உறுப்பினராக வலம் வந்த உதயசூரியன் நேற்று மீண்டும் தனது மனதை மாற்றிக் கொண்டு பாரதிய ஜனதாவுக்கே திரும்பி விட்டார்.
    • பா.ஜ.க. மாநில பொது செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க. வில் இணைந்தார்.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகர் மாவட்டத்தில் சுந்தராபுரம் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளராக உதயசூரியன் என்பவர் இருந்தார்.

    கடந்த 13 வருடங்களாக இவர் பா.ஜனதாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் உதயசூரியன், திடீரென பா.ஜ.க.வில் இருந்து விலகி கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

    7 நாட்கள் தி.மு.க. உறுப்பினராக வலம் வந்த உதயசூரியன் நேற்று மீண்டும் தனது மனதை மாற்றிக் கொண்டு பாரதிய ஜனதாவுக்கே திரும்பி விட்டார். பா.ஜ.க. மாநில பொது செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க. வில் இணைந்தார்.

    உதயசூரியன் கட்சியில் சேர்ந்த ஏழு தினங்களில், மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பா.ஜ.கவில் இணைந்த உதயசூரியன் கூறியதாவது:-

    நான் கடந்த 13 ஆண்டுகளாக கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். அப்படி உழைத்தற்கு கிடைத்தது தான் சுந்தராபுரம் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர் பதவி.

    ஆனால் கடந்த சில மாதங்களாகவே, எனக்கும், மாவட்ட நிர்வாகிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்தேன்.

    அந்த சமயம் தான் எனக்கு தி.மு.க.விடம் இருந்து தங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. எனக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும். அவர் தான் என் ரோல்மாடல்.

    ஆனால் மாவட்ட தலைமை மீது இருந்த அதிருப்தி காரணமாகவே தி.மு.க.வில் இணைந்தேன். ஆனால் அங்கு என்னால் இருக்க முடியவில்லை. நாங்கள் தேசிய கொள்கை கொண்டவர்கள். என்னால் திராவிட கொள்கையை பின்பற்ற முடியவில்லை. மீண்டும் பா.ஜ.க.விலேயே சேர்ந்து விடலாம் என்று எண்ணினேன்.

    அப்போது கட்சி மேலிட நிர்வாகிகளும் என்னிடம் பேசினார்கள். அதன்படியே நான் மீண்டும் பா.ஜ.கவில் இணைந்தேன். கட்சிக்காக நான் இன்னும் உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×