என் மலர்
நீங்கள் தேடியது "BJP Administrator"
- தமிழக அரசு பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை என்பது போன்று நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
- புகாரின் பேரில் நிர்மல்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருப்பவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இவர் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை என்பது போன்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மல்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று நிர்மல்குமார் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். #BJP #PMModi
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
தர்மபுரி மற்றும் கடலூர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் இதில் பங்கேற்று பேசினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.
மோடியிடம் தமிழக நிர்வாகி ஒருவர், “பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும். தி.மு.க., அ.தி.மு.க., ரஜினி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?” என்று கேட்டார்.

மோடி மேலும் கூறுகையில், “கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜனதா செயல்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணியை வெற்றிகரமாக நடத்தியவர் வாஜ்பாய்.
தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றாலும் கூட்டணியோடு இணைந்தே பா.ஜனதா ஆட்சி அமைக்கும்” என்றார். #BJP #PMModi
பிரதமர் நரேந்திர மோடி தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
தர்மபுரி மற்றும் கடலூர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் இதில் பங்கேற்று பேசினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.
மோடியிடம் தமிழக நிர்வாகி ஒருவர், “பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும். தி.மு.க., அ.தி.மு.க., ரஜினி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?” என்று கேட்டார்.
அதற்கு மோடி பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக்கான வாசல் திறந்தே இருக்கிறது. பழைய நண்பர்களையும் (கட்சிகளையும்) வரவேற்க பா.ஜனதா தயாராக உள்ளது” என்றார்.

மோடி மேலும் கூறுகையில், “கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜனதா செயல்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணியை வெற்றிகரமாக நடத்தியவர் வாஜ்பாய்.
தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றாலும் கூட்டணியோடு இணைந்தே பா.ஜனதா ஆட்சி அமைக்கும்” என்றார். #BJP #PMModi






