search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகுபலி யானை."

    • 4-வது நாளாக யானையை தேடும் பணி நடக்கிறது.
    • யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இதனை பொதுமக்கள் செல்லமாக பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

    இந்த யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றியதை வனப்பணி யாளர்கள் பார்த்தனர்.

    இதபற்றிய தகவல் அறிந்ததும் யானையின் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை யினர், அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர்.

    வனத்துறை 2 குழுக்கள் அமைத்தும், மோப்பநாய்கள் உதவியுடன் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கா கவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்து றையினர் திட்டமிட்டனர்.

    இதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யா னைகள் வரழைக்கப்பட்டன.

    அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொ ண்டு வருகிறார்கள்.

    இன்று 4-வது நாளாக யானையை தொடர்ந்து தேடும் பணியில் வனத்து றையினர் ஈடுபட்டனர்.

    தற்போது யானையானது நெல்லித்துறை வனப்பகுதிக்குட்பட்ட குமரிக்காடு பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.

    அங்கு யானையின் நிலைமையை கண்காணித்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை சரியான இடத்திற்கு வந்தவுடன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாகுபலி காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது.
    • பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததால் பாகுபலி யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாகுபலி காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது.

    இந்த யானை ஊருக்குள் புகுவதும், அங்குள்ள விளை நிலங்களில் பயிர்களை தின்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது. ஆனால் மனிதர்கள் யாருக்கும் அந்த யானை தொந்தரவு கொடுக்கவில்லை.

    பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததால் பாகுபலி யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை சென்று விட்டதால் அதனை பிடிக்கவில்லை. தொடர்ந்து யானையை கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே பாகுபலி யானை சிறுமுகை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் முகாமிட்டு அங்கேயே இருந்தது.

    தற்போது வனத்தில் வறட்சி தொடங்கியதால் பாகுபலி யானை 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உணவு, தண்ணீர் தேடி தான் முதலில் சுற்றி திரிந்த மேட்டுப்பாளையம் பகுதியை நோக்கி வந்தது.

    நேற்று இரவு மேட்டுப்பாளையம்- வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை வந்தது.

    யானை வனத்தை விட்டு வெளியேறி அந்த வழியாக செல்லும் சாலையை ஒய்யார நடைபோட்டு கடந்து சமயபுரம் ஊருக்குள் நுழைந்தது.

    அங்குள்ள தெருக்களில் யானை சிறிது நேரம் சுற்றி திரிந்தது. ஆனால் யானை யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் சுற்றி திரிந்து விட்டு மீண்டும் வனத்திற்குள் சென்று விட்டது.

    இந்த பாகுபலி யானை எவரையும் தாக்கியது இல்லை என்பதால் அப்பகுதி மக்களும் இதனை சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இருப்பினும் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த இரு மாதங்களாக பாகுபலி காட்டு யானை எங்கள் பகுதிக்கு வரவில்லை. தற்போது மீண்டும் பாகுபலி யானை ஊருக்குள் வலம் வரத்துடன் தொடங்கியுள்ளது.

    எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையினரும் தொடர்ந்து பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் யாரும் யானைக்கு தொந்தரவு கொடுக்காததால் யானையும் அச்சுறுத்தவில்லை.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானையான பாகுபலி சுற்றி திரிந்து வருகிறது.

    இந்த யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து, அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதையடுத்து அந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினரும் தொடர்ந்து பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் பாகுபலி யானை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றி திரிந்து வந்தது. குறிப்பாக சமயபுரம் பகுதியிலேயே அதன் நடமாட்டம் இருந்தது.

    ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்திருந்தனர்.

    இன்று காலை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறியது. அந்த யானை மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் அங்குமிங்குமாக சென்றவண்ணம் இருந்தது.

    சாலையின் நடுவிலும் ஒய்யார நடைபோட்ட படி யானை திரிந்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் விளக்கை ஒளிரவிட்டபடி நகர்ந்து சென்றன. அவற்றையெல்லாம் யானை கண்டுகொள்ளாமல் ரோட்டில் நடந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகனங்களில் இருந்த பயணிகள் யானையை ஆச்சர்யத்துடனும், அச்சத்துடனும் பார்த்தனர். வாகன ஓட்டிகள் யாரும் யானைக்கு தொந்தரவு கொடுக்காததால் யானையும் அச்சுறுத்தவில்லை.

    சில நிமிடங்களுக்கு பின் யானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அதன்பின் வாகனங்கள் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றன. அதிகாலையில் நடுரோட்டில் யானை நடமாடியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ×