search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. நிர்வாகி"

    • பா.ஜ.க நிர்வாகியின் பைக்கை மர்மநபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் பாரதியார்நகர் தெற்கு 4-வது தெருவை சேர்ந்தவர் வித்யாபதி (வயது30). இவர் தனியார் வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளராகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி சென்றார். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வித்யாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பைக்கை தீ வைத்து எரித்தி ருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது. அதிர்ஷ்ட வசமாக அப்பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள் செல்லவில்லை. மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை. எனவே இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இளையான்குடியில் பா.ஜ.க. நிர்வாகி கார் உடைக்கப்பட்டது.
    • டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பா.ஜ.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையான்குடி வழியாக ராமநாதபுரம் வந்தார்.

    அப்போது இளை யான்குடி கண்மாயக்கரை பகுதியில் அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் ஒரு டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவத்திற்கு இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி சாலை கிராமம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் வேலூர் இப்ராஹிம் சாலைகிராமத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.

    ×