search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. கொடி"

    • கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர்.
    • 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடு த்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தை கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர். மரக்காணம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஞானசேகரன் தலைமையி லான நிர்வாகிகள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடு க்க வேண்டுமென புகாரளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    ×