என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பஸ் மோதி டிரைவர் பலி
நீங்கள் தேடியது "பஸ் மோதி டிரைவர் பலி"
- கூடலூர்-கம்பம் நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது.
- காரை ஓட்டிவந்த டிரைவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் யாதவர் திருமணமகால் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(35). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கம்பம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காைர அவரே ஓட்டிச்சென்றார். கூடலூர்-கம்பம் நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது கம்பத்தில் இருந்து குமுளிநோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.
இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நவநீதகிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவரான பெரியகுளத்தை சேர்ந்த முத்துராஜ்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X