search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதான கட்டிடம்"

    • வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
    • ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்காலி கமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் பள்ளி இயங்கி வந்தது.

    இது குறித்து அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக பொதுமக்கள் முறையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திண்டுக்கல் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது
    • ஆபத்தான கட்டிடத்துக்கு குழந்தைகளை அனுப்பி விட்டு நாங்களும் நிம்மதியாக இருக்க முடியாது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி அருகே உள்ள செம்மனாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு காடையனூர், ஊரானூர், சீத்தப்பட்டி, மம்மானியூர், கருங்கல்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் பிறகு எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பள்ளி கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து பெற்றோர்கள் மாவட்ட கலெக்டருக்கும், கல்வித்துறை அலுவலகத்து க்கும் பல முறை புகார் மனு அனுப்பினர்.

    ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளி கட்டிடம் மேலும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டனர்.

    53 மாணவர்கள் படித்து வரும் இந்தப்பள்ளியில் இன்று அருகில் உள்ள 5 மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர் பாடங்களை நடத்தினர். இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த பள்ளிகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர்.

    அதன் பிறகு இந்த பள்ளிகள் சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அதன் பிறகு எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொண்டோம். எனவே அதிகாரிகள் பள்ளியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள கலையரங்கத்திலோ அல்லது வேறு இடத்திலோ பாடம் நடத்த ேவண்டும்.

    இல்லையெனில் ஆபத்தான கட்டிடத்துக்கு குழந்தைகளை அனுப்பி விட்டு நாங்களும் நிம்மதியாக இருக்க முடியாது என்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அதிகாரி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ×