search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி பாதயாத்திரை"

    • ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
    • தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    • ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை சென்று வருகின்றனர்.
    • ஆறுவழிச்சாலையில் பணிகள் நடந்து வருவதால், பாத யாத்திரை செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் 

    முருக பக்தர்கள் பாதுகாப்பாக பழனி பாத யாத்திரை சென்று வர, தேவையான முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பு அண்ணாதுரை, திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வரும் பிப்., 5ம் தேதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடை பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை சென்று வருகின்றனர்.

    பல்லடத்திலிருந்து தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்வோர், தாராபுரம் ஆறு ரோடு வழிச்சாலையை பயன்படுத்துகின்றனர்.தற்போது ஆறுவழிச்சாலையில் பணிகள் நடந்து வருவதால், பாத யாத்திரை செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    பக்தர்கள், ரோட்டில் செல்ல வேண்டியுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, பாதயாத்திரை செல்லும் ஐந்து நாட்களுக்கு மட்டும், அனைத்து வாகனங்களையும் அவிநாசி பாளையம் வழியாக திருப்பி விடவேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பல்லடத்திலிருந்து குண்டடம் வரை, ரோட்டின் இருபுறமும் முட்கள், பாட்டில்கள் அதிகம் உள்ளன. அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

    தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும்பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் கழிப்பிட வசதி, குடிநீர், தெருவிளக்கு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×