search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின சமூகத்தினர்"

    • பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த திருமண விழா நடை பெற்றது.
    • மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூரில் பவுர்ண மிகாவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த திருமணம் நடைபெற்றது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த திருமண விழா நடை பெற்றது.

    இதில் அட்டபாடியை சேர்ந்த 72 பேரும், இடுக்கி யில் உள்ள கோவில்மாலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 52 பேரும், மகராஷ்டிராவில் உள்ள 8 பழங்குடியினர் என 216 பேர் கலந்து கொண்டனர். மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வழிபாடு செய்த பிறகு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.

    ×